Monday, May 3, 2010

உயிர் பொருத்தம்

காற்றை பூசிக் கொள்ளும்
மரங்கள்...
பூவை புன்னகையாய்
தூவியபடி...
மழையை பூசிக் கொள்ளும்
வானம்...
மனதில் இசையை
மீட்டியபடி...
இரவை பூசிக் கொள்ளும்
விண்மீன்கள்...
நிலவை சுமந்து
சிரித்தபடி...
உன்னை பூசிக் கொள்ளும்
நான்...
உயிரில் உன்னை
சுமந்தபடி...

No comments:

Post a Comment