Tuesday, July 6, 2010

குழந்தை தொழிலாளர்கள் ஒழிப்பு

குழந்தை தொழிலாளர்கள் ஒழிப்பு
குறித்த செய்தி படிக்கிறார்கள்...
தேனீர் கடையில் தேனீர் அருந்திக் கொண்டு...
தேனீர் தந்த சிறுவனோ சிரிக்கிறான்....

Monday, June 14, 2010

சுகம்

காத்திருப்பதை விட வலி வேறு
எதுவும் இல்லை...
நினைத்துக் கொண்டிருப்பதை விட வேறு
சுகம் எதுவும் இல்லை...
எனவே காத்திருக்கும் வலியை
மறக்கிறேன்...
உன்னை நினைக்கும் சுகத்தைக்
கொண்டு...
நீ வரும் வரை...

Monday, May 3, 2010

உயிர் பொருத்தம்

காற்றை பூசிக் கொள்ளும்
மரங்கள்...
பூவை புன்னகையாய்
தூவியபடி...
மழையை பூசிக் கொள்ளும்
வானம்...
மனதில் இசையை
மீட்டியபடி...
இரவை பூசிக் கொள்ளும்
விண்மீன்கள்...
நிலவை சுமந்து
சிரித்தபடி...
உன்னை பூசிக் கொள்ளும்
நான்...
உயிரில் உன்னை
சுமந்தபடி...

Sunday, May 2, 2010

அந்த  பக்கம்   இந்த பக்கம்
எந்த பக்கம் போவது...
திக்கு தெரியாத காட்டில்
மனம்..
நூல் சிக்கலில் மாட்டிக்கொண்ட
காற்றாடி போல..
அங்கும் இங்கும் பறக்கும்
மனம்...

Wednesday, January 6, 2010

மாத்திரை வடிவில் மிட்டாய்கள் - ஆபத்தை நெருங்கும் குழந்தைகள்

    தமிழகத்தின் பல்வேறு    பகுதிகளில் கிராமப்புற சிறுவர்கள் விரும்பி வாங்கி உண்ணும் மிட்டாய்கள் தற்போது மாத்திரைகள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அட்டைகள் வடிவில் விற்கப்படுவதால் ஆபத்தின் விளிம்பில் சிறுவர்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.  

பகுதிகளில் பெட்டிக் கடைகளில் பல வகையான மிட்டாய்கள் விற்கப்படுகின்றன.  சிறுவர்களை கவர வேண்டும் என்பதற்காக பல வண்ணங்களில் பல்வேறு வடிவங்களில் மிட்டாய் தயாரிக்கும் நிறுவனங்கள் மிட்டாய்கள் தயாரித்து அதை கடைகளுக்கு விற்பதும், சிறுவர்களால் கவரப்பட்டு அந்த மிட்டாயை வாங்கி உண்பதும் தற்போது அதிகமாகி வருகிறது. 
 

இந்நிலையில் இந்த மிட்டாய்கள் நாம் மருந்துக் கடைகளில் காணும் மாத்திரைகள் அடைத்து வைக்கப்பட்டு இருக்கும் அட்டைகள் போன்று உள்ளது. இதை 2 வயது முதல் 7 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் அதிகமாக விரும்பி வாங்கி உண்கின்றனர். 

இப்படிப்பட்ட மிட்டாய்களை விரும்பி சாப்பிடும் குழந்தைகள் தங்களை அறியாமல் வீட்டில் நோயால் அவதிப்படுபவர்களின் உபயோகத்துக்காக வைக்கப்பட்டிருக்கும் மாத்திரைகளை மிட்டாய் என நினைத்து தின்று விடும் அபாயம் உள்ளது.  

நோய்களுக்கு நாம் உண்ணும் மாத்திரையும், சிறுவர்கள் திண்ணும் மிட்டாயும் ஒரே வடிவத்தில் இருப்பது பெரியவர்களால் இனம் கண்டு கொள்ள முடியும். ஆனால் சிறுவர்களால் அப்படி இனம் காண முடியாது.  எது மாத்திரை, எது மிட்டாய் என தெரியாமல் மாத்திரையை மிட்டாய் என நினைத்து தின்று விடும் அபாயம் உள்ளது. பெற்றோர்களும் குழந்தைகளுக்கு இம்மாதிரி மிட்டாய்களை அதிகம் வாங்கி கொடுப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

 எனவே இது போன்று மாத்திரை வடிவில் மிட்டாய்கள் தயாரிப்பதை தடுத்து நிறுத்த அரசு ஆவன செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் விரும்புகின்றனர்.
 

Monday, January 4, 2010

காகித ஆலைக் கழிவுகளால் மாசுபடும் ஏரிகள்: 1500 ஏக்கர் விவசாயம் பாதிப்பு


 






  

கும்​மி​டிப்​பூண்​டியை அடுத்த பூவ​லம்​பேடு ஊராட்சி அருகே உள்ள தனி​யார் காகித தொழிற்​சா​லை​க​ளின் கழி​வு​க​ளால் பூவ​லம்​பேடு ஏரி,​​ பெரிய புலி​யூர் ஏரி​கள் மாசு​ப​டு​கின்​றன.​ இத​னால்,​​ சுமார் 1500 ஏக்​கர் பரப்​ப​ள​வில் விவ​சா​யம் பாதிக்​கப்​பட்​டுள்​ள​தால் கிராம மக்​கள் கவ​லை​யில் உள்​ள​னர்.​ ​

கும்மி​டிப்​பூண்டி அடுத்த பூவ​லம்​பேடு ஊராட்​சி​யில் சுமார் 65 ஹெக்​டேர் பரப்​ப​ள​வி​லான ஏரியை நம்பி சுமார் 800 ஏக்​கர் விவ​சாய நிலங்​கள் உள்​ளன.​ அதே போல பூவ​லம்​பேட்டை ஒட்​டிய பெரி​யபு​லி​யூர் ஊராட்​சி​யில் 50 ஹெக்​டேர் பரப்
பள​வி​லான ஏரியை நம்பி சுமார் 750 ஏக்​கர் விவ​சாய நிலங்​கள் உள்​ளன.​ ​


இத​னி​டையே பூவ​லம்​பேடு பகு​தியை ஒட்டி ​ கடந்த 3 ஆண்​டு​க​ளுக்கு முன்​னர் அமைக்​கப்​பட்ட தனி​யார் காகித ஆலை​யின் கழி​வு​கள் கிணறு,​​ ஏரி​க​ளில் கலப்​ப​தா​கக் கூறி,​​ அதை எதிர்த்து பூவ​லம்​பேடு மற்​றும் பெரிய புலி​யூர் ஊராட்​சியை சேர்ந்த பொது​மக்​கள் தொடர்ந்து போராடி வரு​கின்​ற​னர்.​ ​

இந்​நி​லை​யில் இப் பகு​தி​யில் கடந்த 5 மாதங்​க​ளாக செயல்​பட்​டு​வ​ரும் மற்​றொரு காகித ஆலை​யின் கழி​வு​கள் பெரி​யபு​லி​யூர் ஏரி​யில் கலப்​ப​தால் அந்த ஏரி​யும் மாசு​பட்​டுள்​ளது.​ மேலும்,​​ அந்த ஏரி​யின் உபரி நீர் பூவ​லம்​பேடு ஏரி​யில் கலப்​ப​தால் அந்த ஏரி​யும் மாசு​பட்​டுள்​ளது.​

இ​து​கு​றித்து பூவ​லம்​பேடு பகு​தியை சேர்ந்த அசோ​கன் கூறி​ய​தா​வது:​ கடந்த 3 ஆண்​டு​க​ளாக இந்த இரு ஆலை​க​ளின் கழி​வு​க​ளால் மேற்​கண்ட 2 ஏரி​க​ளி​லும் மாசு ஏற்​பட்​டுள்​ள​தால் இப்​ப​கு​தி​யில் விவ​சா​யம் கேள்​விக்​கு​றி​யாக உள்​ளது.​ இது​கு​றித்து புகார் மனுக்​கள் தமி​ழக முத​ல​வர் மற்​றும் ஆட்​சி​யர் உள்​ளிட்ட உயர் அதி​கா​ரி​க​ளுக்கு அனுப்​பி​வைக்​கப்​பட்​டுள்​ளது என்​றார்.​ 

பூ​வ​லம்​பேடு ஊராட்சி துணைத் தலை​வர் ரவி​சங்​கர் கூறி​யது:​ இது​கு​றித்து ஆலை நிர்​வா​கத்​தி​டம் கேட்ட போது,​​ ஆலை​யில் தேக்​கி​வைக்​கப்​பட்​டி​ருந்த கழிவு நீர் மழை​யின் கார​ண​மாக வெளி​யேறி ஏரியை அடைந்து விட்​ட​தாக தெரி​வித்​த​னர் என்​றார்.​

பூ​வ​லம்​பேடு பகு​தியை சேர்ந்த சுந்​த​ர​வ​டி​வேலு கூறு​கை​யில்,​​ கடந்த 5 ஆண்​டு​க​ளுக்கு முன்​னர் இங்​குள்ள ஏரி​க​ளில் விரால்,​​ கட்லா உட்​பட பல வகை மீன்​க​ளும்,​​ பெரிய வகை இறால்​க​ளும் இருந்​தன.​ சுமார் 7 கிலோ எடை​யுள்ள மீன்​கள் கூட மேற்​கண்ட ஏரி​யில் இருந்த நிலை​யில்,​​ காகித ஆலை​க​ளின் கழி​வு​கள் மேற்​கண்ட ஏரி​யில் கலந்​த​தன் கார​ண​மாக ஏரி நீர் மாச​டைந்து மீன்​க​ளின் வளர்ச்சி பாதிக்​கப்​பட்​டுள்​ள​தோடு,​​ இறால் இன​மும் அழிந்​துள்​ளது.​ மேலும்,​​ மீன்​க​ளின் தோலில் சொறி நோய் போல காணப்​ப​டு​கி​றது என்று குற்​றஞ்​சாட்​டி​னார்.​ ​

1 ஏக்​க​ருக்கு 30 மூட்டை நெல் விளைந்த இந்த பூமி​யில் கடந்த 2,​ 3 ஆண்​டு​க​ளாக 1 ஏக்​க​ரில் 15 மூட்டை நெல் மட்​டுமே விளை​கி​றது என்​றும்,​​ நெல்​ப​யிர் முளைத்த 15 நாளி​லேயே சாயந்​து​வி​டு​கி​றது என்​றும் பச்​சை​யப்​பன் குற்​றஞ்​சாட்​டி​னார்.​

தனி​யார் தொழிற்​சாலை அருகே விவ​சா​யம் செய்து வரும் தேர்​வாய் பகு​தியை சேர்ந்த சீனி​வா​ச​னின் நிலத்​தை​யொட்டி உள்ள கிணற்​றின் அருகே ஆலை கழிவு தேக்கி வைக்​கப்​ப​டு​கி​றது.​ இதன் கார​ண​மாக அவ​ரது தோட்​டத்​தில் இருந்த மாஞ்​செடி,​​ விவ​சாய பயிர் பாதிப்​ப​டைந்​தது.​ முன்​னர்,​​ குடி​நீர் போல இருந்த கிணற்று நீர் தற்​போது எந்​த​வித பயன்​பா​டும் இன்றி உள்​ளது.​ இது​தொ​டர்​பாக அந்த ஆலை​யின் உயர் அதி​கா​ரி​க​ளுக்கு புகார் அனுப்​பி​வைக்​கப்​பட்​டுள்​ளது.​

இ​தே​போல ஆலைக் கழி​வால் பாதிக்​கப்​பட்ட பெரி​யபு​லி​யூர் பகு​தி​யைச் சேர்ந்த துரை என்​ப​வர் சென்னை உயர்​நீதி மன்​றத்​தில் தொடர்ந்​துள்ள வழக்கு கடந்த 2 ஆண்​டு​க​ளாக நடை​பெற்று வரு​கி​றது.​ இத​னி​டையே,​​ ஆலை​க​ளுக்கு சொந்​த​மான இடங்​க​ளில் கொட்​டப்​ப​டும் கழி​வு​கள் மழை பெய்​வ​தால் பெருக்​கெ​டுக்​கும் மழை நீரோடு சேர்ந்து ஏரி​க​ளில் கலந்​து​வி​டு​வ​தாக பெரி​யபு​லி​யூர் பகுதி மக்​கள் குற்​றஞ்​சாட்​டு​கின்​ற​னர்.​