Wednesday, January 6, 2010

மாத்திரை வடிவில் மிட்டாய்கள் - ஆபத்தை நெருங்கும் குழந்தைகள்

    தமிழகத்தின் பல்வேறு    பகுதிகளில் கிராமப்புற சிறுவர்கள் விரும்பி வாங்கி உண்ணும் மிட்டாய்கள் தற்போது மாத்திரைகள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அட்டைகள் வடிவில் விற்கப்படுவதால் ஆபத்தின் விளிம்பில் சிறுவர்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.  

பகுதிகளில் பெட்டிக் கடைகளில் பல வகையான மிட்டாய்கள் விற்கப்படுகின்றன.  சிறுவர்களை கவர வேண்டும் என்பதற்காக பல வண்ணங்களில் பல்வேறு வடிவங்களில் மிட்டாய் தயாரிக்கும் நிறுவனங்கள் மிட்டாய்கள் தயாரித்து அதை கடைகளுக்கு விற்பதும், சிறுவர்களால் கவரப்பட்டு அந்த மிட்டாயை வாங்கி உண்பதும் தற்போது அதிகமாகி வருகிறது. 
 

இந்நிலையில் இந்த மிட்டாய்கள் நாம் மருந்துக் கடைகளில் காணும் மாத்திரைகள் அடைத்து வைக்கப்பட்டு இருக்கும் அட்டைகள் போன்று உள்ளது. இதை 2 வயது முதல் 7 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் அதிகமாக விரும்பி வாங்கி உண்கின்றனர். 

இப்படிப்பட்ட மிட்டாய்களை விரும்பி சாப்பிடும் குழந்தைகள் தங்களை அறியாமல் வீட்டில் நோயால் அவதிப்படுபவர்களின் உபயோகத்துக்காக வைக்கப்பட்டிருக்கும் மாத்திரைகளை மிட்டாய் என நினைத்து தின்று விடும் அபாயம் உள்ளது.  

நோய்களுக்கு நாம் உண்ணும் மாத்திரையும், சிறுவர்கள் திண்ணும் மிட்டாயும் ஒரே வடிவத்தில் இருப்பது பெரியவர்களால் இனம் கண்டு கொள்ள முடியும். ஆனால் சிறுவர்களால் அப்படி இனம் காண முடியாது.  எது மாத்திரை, எது மிட்டாய் என தெரியாமல் மாத்திரையை மிட்டாய் என நினைத்து தின்று விடும் அபாயம் உள்ளது. பெற்றோர்களும் குழந்தைகளுக்கு இம்மாதிரி மிட்டாய்களை அதிகம் வாங்கி கொடுப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

 எனவே இது போன்று மாத்திரை வடிவில் மிட்டாய்கள் தயாரிப்பதை தடுத்து நிறுத்த அரசு ஆவன செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் விரும்புகின்றனர்.
 

No comments:

Post a Comment