Tuesday, June 30, 2009

பிரச்சனைகளை சமாளியுங்கள்...


ஒரு எறும்பு தன்னை விட மூணு மடங்கு நீளமான ஒரு புல்லை தூக்கிகிட்டு போய்கிட்டிருந்தது. அது போகற பாதையில தண்ணி இருந்தது .. எறும்பால அந்த தண்ணியில எறங்க முடியாத நிலைமை...

அந்த எறும்பு தான் தூக்கிகிட்டு வந்த புல்லை பின்புறமா இருந்து அந்த தண்ணி மேல வெச்சது. இப்ப அந்த புல்லு தண்ணீர் மேல ஒரு பாலம் போல அமைஞ்சது..

எறும்பு அந்த புல்லு மேல நடந்து தண்ணிய கடந்து பத்திரமா அந்த பக்கம் போன பிறகு புல்லை இழுத்துக்கிட்டு போச்சு...

ஒரு ஐந்தறிவு பிராணியான எறும்பு அத விட பளுவான புல்லை தூக்கிகிட்டு , அது போகற வழில அதுக்கு தடையா தண்ணி இருந்தாலும், அதை சமாளிக்க முடியறபோது போது பிரச்சனைகளை சமாளிக்க மனுஷங்களால முடியாதா...

பிரச்சனை எனபது மனித வாழ்வில் எல்லா சமயங்களிலும் சந்திக்க கூடியது. பிரச்சனை நேர்ந்துவிட்டதே என்று துவண்டு போகாமல் அதை சமாளிக்கும் மன தைரியத்தை நாம வளர்த்துக்க வேணும்..

எந்த பிரச்சனையாக இருந்தாலும் அதற்கென ஒரு தீர்வு இல்லாமல் இல்லை. நாம் நம் வாழ்வில் ஏதாகிலும் பிரச்சனைகளை சந்திக்கும் போது நிதானமா யோசிச்சா கண்டிப்பா அந்த பிரச்சனைக்கு தீர்வு புலப்படும் ...

வாழ்க்கை எனபது ஒரு தடை தாண்டும் ஓட்டத்தை போன்றது.. ஐயோ நமக்கு முன் இவ்வளவு தடைகளா என்று நாம் கலங்கி நின்றால் நம் வாழ்க்கை நமக்கு எப்பவும் கசப்பானதாகவே இருக்கும். அதே சமயம் எத்தனை தடைகள் வந்தாலும் அது என்னை ஒன்றும் செய்யாது, என் முன் நிற்கும் தடை கற்களை உடைத்து என் வாழ்வின் வெற்றிக்கு படி கற்களாக மாற்றிக் கொள்வேன் என்ற உள்ள உறுதியை நாம் வளர்த்துக் கொண்டால் , நாம் நம் வாழ்வில் எந்த பிரச்சனைகளை சந்தித்தாலும் அதை சமாளிக்கும் பக்குவம் பெற்றவர்களாய் ஆவோம்...

என்னால் இது முடியாது, நான் இதிலிருந்து எப்படி மீள்வேனோ என்று அவ அவநம்பிக்கையோடு நாம் இருந்தால் பிரச்சனை என்னும் சூழலில் சிக்கி தவிப்பவர்களாய் நாம் ஆவோம்...

ஆகவே எந்த பிரச்சனை வந்தாலும் பயப்படாது, தன்னம்பிக்கையோடு யோசித்து நாம் செயல் பட்டால் நம்மால் பிரச்சனைகளை எளிதில் சமாளிக்க முடியும்.

மண்ணை ஓர் பிரச்சனையாக
நினைக்காமல் முட்டி மோதி
வெளியாகும் விதை...
அங்கே கற்கலாம் நாம் பிரச்சனைகளை
சமாளிக்கும் திறனை...
நீ கலங்கி நின்றால் உன்
வாழ்க்கை ஓர் போர்க்களம்
நீ சமாளித்து நின்றால் உன்
வாழ்க்கை ஓர் பூக்களம்....

2 comments:

  1. Manithaa Un manathai Keeri Vidhai Podu Maramaagum Avamaanam Padutholvi Ellame Uravaagum kedda padal varikal tan etaiyum nee samalitu nindral vaalkai iru puntottam ....

    ReplyDelete