இறந்தகால சுவட்டில்
நதிக்கரையோரங்கள் ....அனாதை கால் தடங்கள் -முகவரிகளைதேடினேன்...ஒற்றை முகவரி கிடைத்தது- கால்தடம் சென்றேன்..முன்னோக்கி சென்றால் - நிகழ் காலம்முகம் தொலைத்துள்ளது... இறந்த காலம் சென்றேன்...அங்கே... இறந்தகால முகத்திற்கும்நிகழ்கால முகத்திற்கும்வித்யாசங்கள்... ஒரே முகம் - இப்படியாகால மாற்றத்தால் கண்டறியமுடியாமல் போவது... வித்யாசங்கள் படித்தேன் ...இறந்தகாலம் படிக்கையில்கண்ணீர் வடிகிறது... நிகழ்காலம் தொலைத்தவைகளின்நீளமான பட்டியல்களைமுன் நீட்டுகிறது...இறந்த கால இனிப்பை உதட்டில்ஒற்றி எடுக்கையில்... நிகழ்கால கண்ணீர் கன்னம்வழிந்தோடி உதட்டில் படகண் திறந்துநதிக்கரை ஓரம் முன்னோக்கிநடக்கிறேன்...
No comments:
Post a Comment