Tuesday, June 23, 2009

நேர்த்தி கடனோ ?

ஐயனும் ஆத்தாளும்
ஆசை ஆசையா வளர்த்த
ஆட்டுகிடா அய்யனார்
கோவில் திருவிழாவுக்கு
பலியானது - நேர்ந்துகிட்டாங்கலாம்...

பொத்தி பொத்தி
வளர்த்த சேவல் கூட
பொசுக்கென முனீஸ்வரனுக்கு
வெட்டப்பட்டது - நேர்ந்துகிட்டாங்கலாம்...

கண்ணே மணியே என்று
வளர்த்த என்னையும்
குடிகார மனுஷனுக்கு
கட்டி வெச்சாங்க- நேர்ந்துகிட்டாங்களோ....

No comments:

Post a Comment