Wednesday, June 24, 2009

வணங்கா மண் கப்பல் வெளியேற்றம்


இலங்கையில் அவதிப் படும் நம் தமிழ் ரத்தங்களின் துயரினை காண பொறுக்காமல் உலக தமிழ் நல்லுள்ளங்கள் எல்லாம் இணைந்து உணவு , மருந்து பொருட்களை சேகரித்து இலங்கைக்கு கப்பலில் அனுப்பியது. அப்படி வந்த கப்பல் சில நாட்களாக சென்னை துறைமுகத்தில் எரிபொருள் வேண்டி அனுமதிக்காக காத்திருந்தது ...

இந்நிலையில் ஜூன்- 24 அன்று இந்திய கடற்படை வணங்கா மண் கப்பல் சந்தேகத்திற்கு இடமான கப்பல் என்று கூறி , வணங்கா மண் கப்பலை தமிழகத்திலுள்ள இந்திய கடல் எல்லைக்குள் இருந்து வெளியேற உத்தரவிட்டது.

வணங்கா மண் கப்பலில் அப்பாவி தமிழர்களுக்கு தர உணவு, மருந்து உட்பட 884 டன் அளவு நிவாரண பொருட்கள் மட்டும் தான் உள்ளது. இலங்கையில் போர் நடக்கும் பொது தான் தமிழ் மக்களை காப்பாற்ற இந்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இப்போது கூட காப்பாற்ற மனம் இல்லையா...

விடுதலை புலிகளை முற்றிலுமாக அழித்து விட்டதற்கு பாராடுக்கள் என்று இலங்கை அரசுக்கு பாராட்டுரை கூறிய இந்திய அரசின் கூற்றுப்படி பார்த்தால் இலங்கையில் தற்போது இருப்பது அப்பாவி தமிழர்கள் தானே....

மனிதாபிமான அடிப்படையில் கூட இலங்கை தமிழர்களுக்கு உதவிட இந்திய அரசுக்கு மனம் இல்லையா... தமிழனை மனிதனாக நினைக்க கூடாத அளவு இந்தியாவிற்கு தமிழனின் மேல் என்ன கோவம்...

பாகிஸ்தானில் சரப்ஜித் சிங் தூக்கிலிடப்பட கூடாதென தூது மேல் தூது விடும் இந்திய அரசுக்கு தமிழனின் கண்ணீர் மட்டும் ஏன் கண்ணுக்கு தெரியாமல் போகிறது.... ஒரு உயிருக்கு (சரப்ஜித் சிங்) இவ்வளவு மதிப்பு உள்ளதென தெரிந்த உங்களால் பசியால் சாகும் பல நூறு தமிழ் மக்களின் உயிரின் மதிப்பு தெரிய வேண்டாமா .....

நெஞ்சு பொறுக்குதில்லையே
இந்த நிலை கெட்ட மாந்தரை
காண்கையிலே ....

1 comment:

  1. நம்ம அரசியல்வியாதிங்க,தமிழின தலைவலிங்களுக்கெல்லாம் எங்கப்பா போனாங்க ???

    ReplyDelete