Sunday, June 21, 2009

தோற்றது இந்தியா

இலங்கையில் 30 ஆண்டுகளாக நடைபெற்ற போர் முடிவடைந்து விட்டது. விடுதலை புலிகளை நாங்கள் முற்றிலும் தோற்கடித்து விட்டோம் என்று இலங்கை அரசு அறிவித்ததற்கு இந்தியா அரசு தனது பாராட்டை தெரிவித்தது.

உண்மையில் விடுதலை புலிகளுடன் இலங்கை அரசு நடத்திய போரில் தோற்றது இந்திய அரசு தான் .

இந்த போருக்கு முன்னர் இதுவரை இந்திய அரசின் வாய் பேச்சுக்கு கட்டுப்பட்ட இலங்கை அரசு இப்போது இந்திய அரசின் முன் நெஞ்சை நிமிர்த்துக் காட்டுகிறது...

1993 ஆம் ஆண்டு இலங்கையில் காலே துறைமுகத்தில் சீனாவின் நோரிங்கோ ஆயுத நிறுவனம் பெரிய அளவில் ஆயுத கிடங்கை திறப்பதற்கு இலங்கையுடன் உடன்பாடு செய்தது.

இந்த உடன்பாட்டின் படி இலங்கை அரசு தனது ராணுவத்திற்கு ஆயுதங்களை வாங்க வேண்டும் என்றால் இந்த கிடங்கிலிருந்து தான் வாங்க வேண்டும். வேறு எந்த நாட்டிலிருந்தாவது ஆயுதங்களை வாங்க வேண்டும் என்றால் நோரிங்கோவின் அனுமதி வேண்டும்.

இந்த ஆயுத கிடங்கு அமைந்து இருப்பதால் தென் ஆசிய நாடுகளுக்கு தேவை படும் போது சீனா ஆயுதங்களை வழங்கும்... இதனால் இந்தியாவை நெருங்கிய ஆபத்துக்கு இந்திய அரசு தான் பதில் சொல்ல வேண்டும்...

2008 ஆம் ஆண்டில் இலங்கைக்கு சீனா வான் புலிகளின் தாக்குதலை கண்டறிய உதவும் நவீன ரேடாரை அளித்து . இந்த ரேடாரினால் விடுதலை புலிகளின் விமான நடமாட்டத்தை மட்டும் அல்ல இந்திய விமான படையின் நடமாட்டத்தை யும் சீனா உளவறிய வழி ஏற்பட்டு விட்டது.

அதே சமயம் 2008 ஆம் ஆண்டு இலங்கைக்கு சீனா 500 கோடி நிதி உதவி அளித்தது. 100 கோடி ஆயுத கடனை தள்ளுபடி செய்தது. சீனாவின் நட்பு நாடுகளான பாகிஸ்தான், ஈரான் இலங்கைக்கு உதவி செய்ய முன்வந்தது. 2006 ஆம் பாகிஸ்தான் இலங்கை அரசுக்கு 300 கோடி மதிப்பிலான ஆயுத உதவியை அளித்தது. இதற்கு பதிலாக பாகிஸ்தானுடன் இலங்கை வணிக உடன்பாட்டை செய்து கொண்டது.

சீனாவுடனும் அதன் கூட்டாளி நாடுகளுடன் நட்பாக இருந்தால் அவர்களின் ஆதரவை பெற்று விடுதலை புலிகளை வென்று விடலாம் என இலங்கை அரசு செயல்பட்டதை இந்திய அரசு கவனிக்க தவறி விட்டது.

ஒரு பக்கம் இந்தியாவின் பேச்சுக்கு தான் கட்டுபடுவதாக நடித்து கொண்டு விடுத்தலை புலிகளுக்கு எதிராக இந்திய அரசை செயல் பட விட்டு, இன்னொரு பக்கம் தென் கடல் பிராந்தியத்தில் சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளை ஊடுருவவிட்டு இன்று இந்தியாவின் தென் கடல் பகுதிக்கு ஆபத்தை கொண்டு வந்த இலங்கை அரசின் நரித்தனத்தை இந்திய அரசு உணராமல் போய் விட்டது.

இப்படி விடுதலை புலிகளை அழிக்க இந்திய அரசின் உதவிகளை ஒரு பக்கம் பெற்று கொண்டே, மறு பக்கம் சீனா, பாகிஸ்தான் நாடுகளின் உதவியையும் இலங்கை பெற்று விடுதலை புலிகளை எதிர்த்து போரிட்டது.

ஈழ தமிழர்களுக்கு சமவுரிமை வழங்க வேண்டுமென எங்களுக்கு ஆணையிட இந்திய அரசுக்கு உரிமை இல்லை ஏகம் , இந்த அறிவுரையை தர இந்திய அரசுக்கு என்ன தகுதி இருக்கிறது என இலங்கை அரசின் பாதுகாப்பு ஆலோசகரான கோதபாய ராஜபக்ஷேவின் இணைய தளத்தில் கூறப்பட்டு உள்ளது. இந்த பேச்சு சீனா மற்றும் பாகிஸ்தானின் நட்பு இலங்கைக்கு உள்ளது என்ற இறுமாப்பில் வந்தது தான்.

இப்படி இலங்கையில் நடைபெற்ற போரில் விடுதலை புலிகள் தோற்றதாக தெரிந்தாலும் உண்மையில் தோற்றது இந்திய தான். இனி இந்தியாவின் பேச்சுக்கு இலங்கை கட்டுப் பட போவதில்லை - அதே சமயம் தென் கடல் பிராந்தியத்தில் சீனாவும் , பாகிஸ்தானும் இலங்கை அரசின் ஆதரவோடு இந்திய கடல் பகுதியை வேவு பார்க்கவும் ஆரம்பித்து விட்டது.

தென் கடல் பகுதியில் தனது பலத்தை உறுதி செய்திடும் நோக்கத்தில் , விடுதலை புலிகளை அழிக்க உதவுகிறோம் என்று சொல்லி பல விதங்களில் இலங்கை அரசுக்கு உதவிய இந்திய அரசு இப்போது சீனா, பாகிஸ்தானை தென் கடல் பகுதியில் இலங்கை அரசால் ஊடுருவ விட்டு வேடிக்கை பார்க்கிறது.

இனி இந்த இரண்டு நாடுகளையும் தென் கடல் பகுதியில் இந்திய சமாளிக்கவே நேரம் சரியாக இருக்கும் என்பதே உண்மை... ஆக தோற்றது விடுதலை புலிகள் இல்லை - இந்திய அரசு தான் ....

1 comment: